சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ்:!!!

* போளிக்கு பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறவும். கெட்டியாகிவிடும்.
* ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால், தெளிந்த ரசம் கிடைக்கும். மிக்ஸியில் வெந்தயம், ஏஅல்க்காய் போன்றவற்றை அரைத்தால், அவற்றின் வாசனை எளிதில் போகாது. அதன் பிறகு, மிக்ஸியில் ஒரு கைப்பிடி வேர்க்கடலை போட்டு அரைத்து எடுத்தால், வாசனை முற்றிலும் நீங்கிவிடும்.
* எள் உருண்டை செய்வதற்கு, எள்ளை தண்ணீரில் அலசினால், கையில் ஒட்டிக்கொண்டுவிடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால், எளிதாக அலசிவிடலாம்.
*. உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது, கிழங்கின்மீது சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுக்கவும். வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும்.
* சர்க்கரையை அப்படியே காபி, டீ, ஜூஸ் போன்றவற்றில் இடும்போது, கரைவதற்கு அதிக நேரம் பிடிக்கும். சில நேரங்களில் கரையாமல் இருந்து வீணாவதும் உண்டு. இதற்குப் பதிலாக சர்க்கரைப்பொடி செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்தினால், நேரமும் மிச்சம். சர்க்கரையும் வீணாகாது.
* அவல் பொரியை அப்படியே பாகில் போடுவதற்குப் பதில், பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடிக்கலாம். பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும்.
* மிளகாய்- பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறவும். அதனுள் சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்யவும். டேஸ்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது.
* பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கவும். மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கரகரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும்.
* சமோசாவை பொறிப்பதற்கு முன்பு, ஒரு சிட்டிகை சோடா உப்பைஎண்ணெய் காய்ந்ததும் போட்டு, பொரிய விடவும். பிறகு சமோசாவைப் பொறித்தெடுக்கவும். மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும்.
* காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைத்தால், ஐஸ்கிரீம் சீக்கிரம் கெட்டியாகிவிடும்.
* தயிர் வடை அல்லது சாம்பார் வடை செய்ய உளுந்து ஊறப் போடும்போது, உளுந்தின் கால் பங்கு அளவுக்கு மசூர்தால் சேர்த்துப் போடுங்கள். வடை மிகவும் மெதுவாக இருக்கும்.
* பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது கேரட், வெங்காயம் துருவிப் போட்டு நிறைய கறிவேப்பிலை சேர்த்தால், கசப்பே தெரியாது.
* கேரட்டில் சூப் செய்யும்போது, அதில் சிறிது சேமியாவை வறுத்துப் போடவும். சூப் திக்காக இருக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும்