அரிசி கஞ்சி செய்வது எப்படி ?

சத்தான அரிசி கஞ்சி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

அரிசி குருணை – 250 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 3 பற்கள்
தேங்காய் பால் – 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

* அரிசி குருணையை நன்றாக கழுவி வைக்கவும்.

* குக்கரில் 750 மில்லி தண்ணீரை விடவும்.

* அதில் அரிசி குருணை, வெந்தயம், பூண்டு மற்றும் உப்பை போட்டு குக்கரை மூடி வைத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

* முதல் விசில் வந்தவுடன் அடுப்பின் வேகத்தை குறைத்து 7 – 8 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.

* பின்னர் பிரஷர் அடங்கிய பின் குக்கர் மூடியை திறந்து தேங்காய் பாலை விட்டு 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

* இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் சுவையாக இருக்கும்.