புடலங்காய்க் கூட்டு

புடலங்காய்க் கூட்டு


தேவையானவை

கடலைப்பருப்பு - 200 கிராம்
புடலங்காய் - ஒன்று
பச்சைமிளகாய் - 2
தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்

செய்முறை:

கடலைப்பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்துத் தாளித்து தேங்காய் விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, வேகவைத்துள்ள கடலைப்பருப்பைச் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். இப்பொழுது சுவையான புடலங்காய்கூட்டு தயார்.

குறிப்பு:
கடலைப்பருப்புக்கு பதில் பாசிப்பருப்பைச் சேர்த்தும் கூட்டுச் செய்யலாம். புடலங்காய்க்குப் பதில் பீர்க்கன்காய், சௌசௌ, வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காயிலும் கூட்டு செய்யலாம்.