சத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது?

சத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது?
சமையல் என்பது ஒரு கலை. நாம் உணவினை பல வழிகளில் சமைக்கிறோம். கொதிக்கவைத்து, ஆவியில் வேக வைத்து, எண்ணெயில் பொறித்து என இவ்வாறு சமைக்கப்படும் உணவின் நிறத்தை, மணத்தை, ருசியை முக்கியமாக அதில் உள்ள சத்துகளை எப்படி தக்க வைத்து கொள்வது?
• காய்களை கழுவிய பின் நறுக்கவும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள்வீணாகும்.
• எண்ணெயில் பொறித்த உணவை விட வேகவைத்த உணவை உண்பது நல்லது. ஏனெனில் அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.
• அதிகமான தண்ணீரில்,அதிக நேரம் உணவு பதார்தத்தை சமைக்கும் பொழுது அதில் உள்ள சத்துகள் அதிகளவில் வீணாகிறது.ஆதலால் தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருளைப் போடவேண்டும்.
• பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது.
• பச்சையாக உண்ணக் கூடிய காய்கறிகளை நன்றாக கழுவிய பின் சாப்பிடும் பொழுது நமக்கு தேவையான சத்துகள் வீணாகமல் கிடைக்கிறது.
• காய்களை நறுக்கி உடனடியாக சமைக்க வேண்டும். இல்லையேல் நிறம் மாறி வீணாகிவிடும்.
• கீரைகளை 4-5 நிமிடங்கள் வரை மூடாமல் சமைக்க வேண்டும். பிறகு மூடிக் கொள்ளலாம்.
• உருளை, கருனை, போன்ற கிழங்குகளின் தோலைசீவி சமைக்காமல் வேகவைத்து தோலை உரித்தால் உடம்புக்கு மிகவும் நல்லது. தோலிலும் சில சத்துகள் உள்ளது.
• பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.
• முட்டையை கொதிக்கவைத்த தண்ணீரில் 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
• ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் பயன் படுத்தக்கூடாது.
• உணவை சமைத்தவுடன் சூடாக சாப்பிடுவதே நல்லது. திரும்ப திரும்ப சுடவைத்து சாப்பிடுவது கெடுதல்.
தரமான காய்கறிகளையும், தானியங்களையும் வாங்கினால் மட்டும் போதாது. அதனை முறையாக, சத்துகள் வீணாகாமல் சமைக்கவும் கற்று அனைவரும் பயனடையவேண்டும்.