பத்தியக் குழம்பு

பத்தியக் குழம்பு

தேவையானவை:

சுண்டைக்காய் வற்றல் - 10, புளி - எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு,வெந்தயம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: காய்ச்சலால் அவதிப்பட்டு மீண்டவர்களுக்கு இந்தக் குழம்பை சாப்பிடக் கொடுக்கலாம். வாய்க்கசப்பு, வயிற்றுப் புண் நீங்க உதவும்.