தினை அரிசி உப்புமா

தினை அரிசி உப்புமா

தேவையானவை:

தினை அரிசி - ஒரு கப்
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

தினை அரிசியை மூன்று முறை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி பதினைந்து நிமிடம் ஊற வையுங்கள். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கடலைப்பருப்பு, இஞ்சி, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இதில் தினை அரிசி, தேவையான அளவு உப்புச் சேர்த்து தீயைக் குறைத்து, மூடி போட்டு பதினைந்து நிமிடம் வேக விடுங்கள். அடுப்பை அணைத்து இறக்கி சூடாகப் பரிமாறுங்கள்.