போஹா ஒரு இனிப்பு பலகாரம்

போஹா செய்து அம்மாக்களை அசத்தலாமா!!!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம். இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள். இதுவரை அம்மாக்கள் தான் சமையல் செய்து கொடுப்பார்கள். ஆனால் அன்னையர் தினத்தன்று, அம்மாக்களை உட்கார வைத்து, அவர்கள் மகிழும் வகையில், அவர்களுக்கு ஏதேனும் ஒரு இனிப்பு பலகாரம் செய்து கொடுக்கலாம். அதில் செய்வதற்கு எளிமையாகவும், சுவையுடனும் இருக்கும், இந்த போஹா ரெசிபி சரியானதாக இருக்கும். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
எண்ணெய் - 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் அக்கலவையில் பாலை பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, பின் அந்த மாவுக் கலவையை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான போஹா ரெசிபி ரெடி!!!