பூசணி சாம்பார்:

பூசணி சாம்பார்:

தேவையான பொருட்கள்:

பூசணித்துண்டுகள்- 10
தக்காளி- 4
வேக வைத்த துவரம்பருப்பு- 4 கரண்டி
சாம்பார்பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்
காயம்- சிறிதளவு
புளி- எலுமிச்சை அளவு
எண்ணெய்- 1 டீஸ்பூன்
தாளிக்க- கடுகு,கறிவேப்பிலை
அலங்கரிக்க- கொத்தமல்லித்தழைகள்

செய்முறை:

1.புளியைச் சுடுநீரில் கரைக்கவும்.
2.குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.
3.அடுப்பை ஏற்றி,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும்.
4.அதனுடன் பூசணித்துண்டுகள்,தக்காளி போட்டு மூடி வைத்து வதக்கவும்.
5.ஓரளவு வெந்தவுடன் புளித்தண்ணீரைக் காய்களுடன் சேர்க்கவும்.
6.மீண்டும் புளியுடன் 1 டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
7.பிறகு உப்பு,மஞ்சள் தூள், சாம்பார் பொடி, காயம் ஆகியனவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
8.காய் வெந்தவுடன் பருப்பைக் கரண்டியால் நன்றாக மசித்து குழம்பில் சேர்க்கவும்.
9.கொத்தமல்லியை அலம்பி சாம்பார் மேல் தூவி அலங்கரிக்கவும்.

கூடுதல் குறிப்புகள்:

1.தண்ணியாக குழம்பு வந்தாலும் பரவாயில்லை, சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும். மிக மிக தண்ணியாகக் குழம்பு ஆகி விட்டால் மட்டுமே அரிசிமாவைக் கரைத்து சேர்க்க வேண்டும்.அதிக கெட்டியாகி விட்டால் குழம்புடன் சிறிது சுடு நீர் சேர்க்கவும்.
2.சாம்பாரை விதவிதமான முறையில் செய்யலாம். மேற்கூறிய முறை எளிய முறை.
3.உப்பு,காரம் அவரவர் தேவைகளுக்கேற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவேண்டும்.
4.ருசியான சாம்பார் அமைய வீட்டிலேயே சொந்தமாகத் திரித்த சாம்பார் பொடியைப் பயன்படுத்த வேண்டும்.
5.சாம்பார் செய்து முடிக்கும் தருவாயில் கடுகு,தாளிசம் செய்து கொள்ளலாம்.