மாங்காய்ப் பிசறல்(கோசாலி மாங்காய்)

மாங்காய்ப் பிசறல்(கோசாலி மாங்காய்)


தேவையான பொருட்கள்

பெரிய மாங்காய்-1
நல்லெண்ணெய்-3 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
வெந்தயம்-1/4 டீஸ்பூன்
காரப்பொடி-1 டீஸ்பூன்
காயம்-1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை-5 இலைகள்

உப்பு-தேவையான அளவு

செய்முறை

1.மாங்காயைஅலம்பித் தோலுடனேயே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வாணலியில் நல்லெண்ணெயைக் காய்ச்சி வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்திற்கு அந்த எண்ணெயை மாற்றி விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளிசம் செய்யவும்.
3.மாங்காய்த் துண்டுகளுடன் மிளகாய்ப்பொடி(காரப்பொடி),உப்பு,காயம்,வறுத்த வெந்தயப்பொடி(1/4 டீஸ்பூன்) சேர்த்து நன்கு கிளறவும்.
4.காய்ச்சிய எண்ணெயைச் சேர்த்து ஊற விடவும்.

கூடுதல் குறிப்புகள்

1.உப்பு,காரம் சரியாக இருக்கிறதா? என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டு அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்ய வேண்டும்.
2.சில நிமிடங்களில் தயார் செய்ய முடிகிற இந்த ஊறுகாயை 2 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும், இல்லாவிடில் கெட்டு விடும்.
3.வெந்தயம் சேர்க்காமலும் செய்யலாம். வெந்தயம் சேர்ப்பவர்கள் கவனமாகவும் குறைந்த அளவிலும் போட வேண்டும், இல்லையென்றால் ஊறுகாய் கசந்து விடும்.
4.எண்ணெயில் ஊறும் போது தான் ஊறுகாய் மென்மையாகும்.
5.பொங்கல்,தயிர்சாதத்திற்குப் பொருத்தமான ஊறுகாய்.