கூழ் வற்றல் மசாலா

கூழ் வற்றல் மசாலா

தேவையானவை:

கூழ் வற்றல் 25, பெரிய வெங்காயம் 2, தக்காளி 1, மிளகாய்தூள் ஒன்றேகால் டேபிள்ஸ்பூன், மல்லித் தூள் அரை டேபிள்ஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, கரம் மசாலா தூள் கால் டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, சோம்பு அரை ஸ்பூன், எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்.

செய்முறை:

வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கிலும் தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளவும். கூழுவற்றலை சுடுதண்ணீரில் வேகவைத்து, பின் உப்பு சேர்த்து 5 நிமிடங்களில் நீரை வடித்துவிடவும். வாணலியில் எண்ணெயைச் சுடவைத்து சோம்பு போட்டு தாளித்து பெரிய வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கியதும், அதில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். பொடிகளின் பச்சை வாடை போனதும் வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கி, 1 ஸ்பூன் தக்காளி சாஸ் விட்டு கிளறி பரிமாறவும். அருமையான சைட் டிஷ் இது.